டெல்லியில் பண்டிகை காலங்களில் காற்று மாசுபாடு அதிகரிக்கிறது. மேலும், காற்று மாசுபாட்டால் பல்வேறு சுவாச கோளாறுகள் ஏற்படுகிறது. எனவே, நவம்பர் 7 முதல் 30 ஆம் தேதி வரை பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலின் நலனுக்காக நவம்பர் 7-30 முதல் பட்டாசு பயன்படுத்த தடை விதிக்கப்பட வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் (MoEF) மற்றும் நான்கு மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேசிய தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஏ.கே.கோயல் தலைமையிலான பெஞ்ச், (MoEF), மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி), டெல்லி மாசு கட்டுப்பாட்டு குழு, டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் டெல்லி, ஹரியானா, உத்திரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் அரசாங்கங்களிடமிருந்து பதிலளிக்க வேண்டும் என உத்திரவிட்டுள்ளது.
இந்த விஷயத்தில் உதவுவதற்காக மூத்த வழக்கறிஞர் ராஜ் பஞ்ச்வானி மற்றும் வழக்கறிஞர் ஷிபானி கோஷ் ஆகியோரை தேசிய பசுமை நீர்ப்பாயம் நியமித்தது. கொரோனா தொற்றுநோயின் தீவிரத்தன்மையுடன் காற்றின் தரம் குறைந்துள்ள நேரத்தில், என்.சி.ஆர். இல் பட்டாசுகளைப் பயன்படுத்துவதன் மூலம் மாசுபடுதலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சந்தோஷ் குப்தா மூலம் தாக்கல் செய்யப்பட்ட இந்திய சமூக பொறுப்பு வலையமைப்பின் மனுவை தீர்ப்பாயம் விசாரித்தது. பண்டிகை காலங்களில் காற்று மாசுபாடு காரணமாக கொரோனா தொற்றுகள் அதிகரிக்கும் என்று மத்திய சுகாதார அமைச்சர் மற்றும் டெல்லி சுகாதார அமைச்சரின் அறிக்கையை இந்த மனு குறிப்பிட்டுள்ளது.
அதிகரித்த மாசுபாடு பாதிக்கப்படக்கூடிய குழுக்களை மேலும் பாதிக்கும் மற்றும் இறப்பு விகிதத்தை அதிகரிக்கும். டெல்லியில் கொரோனா தொற்றுகள் ஒரு நாளைக்கு 15,000 வரை உயரக்கூடும். தற்போதைய வழக்குகள் ஒரு நாளைக்கு 5,000 என பட்டாசுகளைப் பயன்படுத்துவது நிலைமைக்கு தீர்வு காணாது. காற்று மாசுபாட்டால் சுவாச கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.