நாட்டை பிளவுபடுத்தும் வகையில் கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்தை எதிர்த்து புதுச்சேரி சாரம் ஜீவானந்தம் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பிரதேசத் தலைவர் ஆனந்து, மாணவர் சங்க பிரதேசத் தலைவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் பிரதேச செயலாளர் சரவ ணன், நிர்வாகிகள் பாஸ்கர், வின்னரசு, சஞ்சீவி, செம்மலர், வந்தனா, நிலவழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.