புதுச்சேரி, மே 27-மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் புதுச்சேரி சட்டமன்றம் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்ற பெற்ற திமுக வேட்பாளர் கே.வெங்கடேசன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை திங்களன்று(மே27) சட்டப் பேரவையில் சந்தித்து வாழ்த்து பெற்றார். திமுக மாநில அமைப்பாளர்கள் எஸ்.பி.சிவக்குமார்,சிவா எம்.எல்.ஏ மற்றும் பலர் உடனிருந்தனர். இதனையடுத்து,செய்தியாளர்களை சந்தித்த வெங்கடேசன், புதனன்று(மே29) சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக் கொள்ளுவதாக தெரிவித்தார்.அவருக்கு பேரவைத் தலைவர் பொறுப்பு வகிக்கும் துணைத் தலைவர் சிவக்கொழுந்து பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த நிகழ்வில் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.