மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்தும், புதுச்சேரி அரசு பணத்திற்கு பதில் இலவச அரிசி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுச்சேரி முழுவதும் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் நடைபெற்றது. உழவர்கரை நகரப் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு நகரச் செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார். பிரதேசச் செயலாளர்ஆர்.ராஜாங்கம், மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர் சத்தியா, பிரதேசக்குழு உறுப்பினர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.