tamilnadu

img

கட்சியினருக்கு காங்கிரஸ்  கட்டுப்பாடு

புதுதில்லி:
தொலைக்காட்சி விவாதங்களுக்கு, சுமார் ஒரு மாத காலத்திற்கு, கட்சியின் சார்பில் பிரதிநிதிகளை அனுப்புவதில்லை என காங்கிரஸ் முடிவெடுத்துள்ளதாக, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில்,  நாடுமுழுவதும் உள்ள தொலைக்காட்சி ஊடகங்கள், ஆசிரியர்கள் தங்கள் விவாத நிகழ்ச்சிகளில் காங்கிரஸ் சார்பில் பிரதிநிதிகளை அமர வைக்க வேண்டாம் என கேட்டுக்கொள்வதாகவும் சுர்ஜேவாலா குறிப்பிட்டுள்ளார்.