புதுதில்லி:
தில்லியில் மொத்தமுள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. இங்கு ஆளும் ஆம் ஆத்மி கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கடும் பின்னடை
வைச் சந்தித்துள்ளன. தில்லியில் காங்கிரசுடன் தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்வதற்கு, ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து முயற்சித்து வந்தது.
காங்கிரசுக்கு 4 தொகுதிகளை கொடுத்துவிட்டு, 3 தொகுதிகளில் மட்டும் தாங்கள் போட்டியிடத் தயார் என்றும் அக்கட்சி கூறியது. இதனை ஒருகட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஏற்றுக் கொண்டார்.ஆனால், காங்கிரசின் தில்லி மாநிலத் தலைவர்கள், கூட்டணிக்கு ஒப்புக் கொள்ளவில்லை. இந்த பின்னணியில், தில்லியிலுள்ள 7 தொகுதிகளையுமே பாஜக கைப்பற்றியுள்ளது. பாஜக வேட்பாளர்கள் 3 தொகுதிகளில் சுமார் 1 லட்சம் வாக்குகள் வரை வித்தியாசம் பெற்றுள்ளனர்.