புதுதுல்லி,மே 24- தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (எய்ம்ஸ்) மூத்த மருத்துவரான பேராசிரியர் ஜிதேந்திர நாத் பாண்டே கொரோனாவால் உயிரிழந்தார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரு கிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள், டாக்டர்கள் கொரோனா வால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு சில டாக்டர்களும் பலியாகியுள்ளனர். இந்நிலையில் தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறு வனத்தின் (எய்ம்ஸ்) மூத்த மருத்துவ ரான பேராசிரியர் ஜிதேந்திரநாத் பாண்டே கொரோனாவால்உயிரிழந்தார். இவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் நுரையீரல் துறை இயக்குநராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி வந்தார். கொரோனா காரணமாக இவர் உயிரி ழந்ததை தில்லியின் மூத்த மருத்துவர் டாக்டர் சங்கீதா ரெட்டி உறுதிப்படுத்தினார். இதுதொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள டிவிட்டர் பதிவில், எய்ம்ஸ் மருத்துவமனையின் நுரையீரல் துறை இயக்குநரும், பேராசிரியர் டாக்டர் பாண்டேவை கொரோனா எடுத்துக் கொண்டது என்று கூறியதை கேட்டு மிகவும் வருத்தமடைகிறோம். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல் என்று தெரிவித்துள்ளார்.