புதுச்சேரி, மார்ச் 16- புதுச்சேரியில் கொ ரோனா தொற்று பரவாமல் தடுக்க மருத்துவ உபகரணங் கள் வாங்க ரூ.7.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரி வித்துள்ளார். புதுச்சேரி சுகாதாரத் துறை சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சுகாதாரத்துறை வளாகத்தில் திங்களன்று (மார்ச் 16 ) நடைபெற்றது இந்தக் கூட்டத்திற்கு சுகாதாரத்துறைஅமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமை தாங்கினார். சுகா தாரத்துறைச் செயலர் பிரசாந்த்குமார் பாண்டா, மாவட்ட ஆட்சியர் அருண், சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார், மற்றும் மருத்துவ அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:- கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனை களில் 400 தனிமைப்படுத் தப்பட்ட படுகைகள் தயாராக உள்ளது. எதிர்காலத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக ஏற்பட்டால், அதற்காக மருத்துவமனை களை வலுப்படுத்துவ தற்கும், தேவையான மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்கும் ரூ.130 கோடி தேவைப்படும். இதற்கு முதற்கட்டமாக புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாமுக்கு 120 வெண்டிலேட்டர் தேவைப் படுகிறது. இதற்காக சுகா தாரத்துறை மூலம் ரூ.6 கோடியும், வருவாய்த்துறை மூலம் ரூ.1.50 கோடியும் என மொத்தம் ரூ.7.50 கோடி நிதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டு ள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்து புதுவைக்கு பேருந்து, ரயில்களில் வரும் பயணிகள், ஓட்டல்களில் தங்கியுள்ளவர்களை பரி சோதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுவையில் சுற்றுலா பயணிகளின் வருகைகயை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல் பட்டு வருகின்றன. புதுவை யில் இதுவரை ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப் படவில்லை. ஆஷா பணி யாளர்கள் ஒவ்வொருவரும் 100 குடும்பங்களை சந்திக் கும் வகையில் கொரோன விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.