tamilnadu

புதுச்சேரி என்.ரங்கசாமி வீட்டில் தேர்தல் பறக்கும்படை சோதனை

புதுச்சேரி,ஏப்.17- புதுச்சேரி முன்னாள் முதலமைச்சரும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவருமான என். ரங்கசாமி வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். புதுச்சேரி மக்களவை தொகுதிக்கு ஏப். 18 அன்று தேர்தல் நடைபெறுகிறது. அதையொட்டி, பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.பணம் பட்டுவாடா தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, முன்னாள் முதல்வரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவருமான ரங்கசாமி வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

;