tamilnadu

img

புதுச்சேரியில் 9 வயது சிறுமி சடலமாக மீட்பு!

புதுச்சேரியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு காணாமல் போன 9 வயது  சிறுமி ஆர்த்தி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 
புதுச்சேரி சோலைநகா் பாடசாலை வீதியைச் சேர்ந்தவர் நாராயணன். இவரது 9 வயது மகள் ஆர்த்தி அங்குள்ள அரசுப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2-ஆம் மாலை தனது வீட்டின் அருகே விளையாடச் சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் சிறுமியின் தோழிகளின் வீடுகளில் தேடியுள்ளனர். சிறுமி குறித்து தகவல் கிடைக்காத நிலையில் இது குறித்த காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து மாயமான சிறுமியைத் தேடி வந்தனர். 
இதற்கிடையில் சிறுமி குறித்து தகவல் கிடைக்காததால், போலீசார் அலட்சியமாக செயல்படுவதாக குற்றச்சாட்டி சிறுமியின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் நேற்று முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், சிறுமி வீட்டின் அருகே உள்ள பாதாளச் சாக்கடையில் மூட்டை ஒன்று மிதந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனை சோதனை செய்தபோது, அது மாயமான சிறுமியின் உடல் என்பது தெரியவந்தது. சிறுமியின் உடல் போர்வை மற்றும் வேட்டியால் சுற்றி சாக்கடையில் வீசப்பட்டதும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் உடல்கூறாய்வுக்காக சிறுமியின் சடலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.