புதுச்சேரி, நவ. 21- கடலூர் மாவட்டம் வீராணத்தை சேர்ந்தவர் முரசொலி. இவரது மனைவி இலக்கியா (19). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு பிரசவவலி ஏற்பட்டது. இதனால் உள்ளூர் மருத்து வமனைக்கு சென்றார். அங்கிருந்த மருத்துவர்கள் பிரசவ நாள் என்பதால் ஏற்கனவே சிகிச்சை பெறும் ஜிப்மருக்கு செல்ல அறிவுறுத்தினர். அப்போது வாகனம் கிடைக்காததால் மோட்டார் பைக்கில் முரசொலி, இலக்கியா, உறவினர் கலை யரசி ஆகியோர் ஜிப்மருக்கு வந்து கொண்டிருந்தனர். ஜிப்மர் அருகே வந்த போது அவர்களை வழிமறித்த போக்குவரத்து காவல் துறையினர், மோட்டார் சைக்கிளில் 3 பேர் வருவதா கக் கூறி ரூ. 1000 அபராதம் விதித்துள்ளனர். அவர்க ளிடம் பணம் இல்லாததால் கட்ட முடியவில்லை. இத னால் மோட்டார் சைக்கிளின் சாவியை அங்கிருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆறுமுகம் பறித்து கொண்டதாக கூறப் படுகிறது. கர்ப்பிணி பெண்ணும் அவரது கணவரும் எவ்வ ளவோ கெஞ்சியும் சாவியை தர உதவி ஆய்வாளர் மறுத்து விட்டார். இதனால், சுமார் 2 மணி நேரம் அங்கு கர்ப்பிணி பெண் தவித்தப்படி நின்றிருந்தார். அங்கிருந்தோர் அதை பார்த்து பாதுகாப்பு பணிக்கு வந்த உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதைய டுத்து உதவி ஆய்வாளர் சாவியை அளித்தார். அதன் பிறகு முரசொலி மனை வியை மருத்துவமனையில் சேர்க்க ஜிப்மருக்கு அழைத்து சென்றார்.