tamilnadu

img

நிபா வைரஸ் அறிகுறியுடன் ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் அனுமதி

புதுச்சேரி:
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறியுடன் கூலி தொழிலாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் மேலபூவிழுந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி, கேரளாவில் பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சொந்த ஊர் திரும்பிய அவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, நிபா வைரஸ் தொற்று இருக்கலாம் என சந்தேகித்த மருத்துவர்கள், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற அறிவுறுத்தி னர்.  அதன் அடிப்படையில் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தனி பிரிவில் வைக்கப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.  அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனே மத்திய சோதனை கூடத்திற்கு அனுப்பப்பட உள்ளது.

அதன் முடிவுகள் கிடைக்கப்பெற்ற பிறகே அவருக்கு நிபா வைரஸ் தொற்று உள்ளதா என்பது தெரியவரும்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேரளாவில் பணியாற்றிய கடலூர் மாவட்ட கூலி தொழிலாளி ஒருவர், நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறியுடன் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதும், பின்னர் அவருக்கு நிபா வைரஸ் இல்லை என உறுதிசெய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 
 

;