புதுச்சேரியில் தொற்று 8,762
புதுச்சேரியில் புதிதாக 328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,762 ஆக அதிகரித்துள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 129ஆக உயர்ந்துள்ளது. கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் உள்ள இஸ்லாமியா மகளிர் கல்லூரி வளாகத்தில் 300 படுக்கை வசதியுடன் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் துவக்கப்பட்டுள்ளது.
தற்கொலை
விழுப்புரம் மாவட்டம் சித்தாமூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த செஞ்சி அடுத்த களம்பூர் கிராமத்தை சேர்ந்த இருசப்பன் கழிவறை ஜன்னலில் தனது வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வீடு திரும்பிய அமைச்சர்
கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி கல்வித் துறை அமைச்சர் கமலக்கண்ணன் குணமடைந்து வீடு திரும்பினார்.
புதுப்பெண் சாவு
ஆற்காடு அருகே திருமணமான 13 நாளில் புதுப்பெண் கனிமொழி (30) மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ரத்தினகிரி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.