tamilnadu

img

புதுச்சேரியில் படிப்படியாக மதுவை ஒழிக்க நடவடிக்கை முதல்வர் நாராயணசாமி பேச்சு

புதுச்சேரி,பிப்.19- புதுச்சேரியில் படிப்படியாக  மதுவை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனம், புதுச்சேரி சமூக நல வாரியம் இணைந்து  போதைப் பொருள் பயன்பாட்டை தடுப்பதற்கான 2 நாள் திறன்மேம்பாட்டு கருத்தரங்கத்தை புதுச்சேரி கல்வித்துறை வளாகத்தில் நடத்தினர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசியதாவது:- புதுவைக்கு திருவண்ணாமலையி லிருந்து கஞ்சா வருகிறது. எங்கு கஞ்சா உற்பத்தி செய்யப்படுகிறது என்று காவல்துறையிடம் கூறியுள்ளேன். இதனை ஒரு பெண் தாதாவிற்பனை செய்கிறார். ரயில் மூலமாக கஞ்சாவை புதுவைக்கு அனுப்பிவைக்கின்றனர். இதனால் சிறிய பிள்ளைகள் பாதிக்கப்படுகின்றனர்.  பெரியார் நகர், வில்லியனூர், திருபுவனை, மண்ணாடிப்பட்டு, நெட்டப்பாக்கம் உள்ளிட்ட  பகுதிகளில்கூட கஞ்சா விற்பனை நடக்கிறது. இதனை தடுக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நேற்று 6 கடைகளை பிடித்துள்ளனர். இதுகுறைவுதான். இதனை தடுத்து நிறுத்த வேண்டிய முதல் பொறுப்பு அரசுக்குஉள்ளது. அதற்கு அடுத்தப்படியாக ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு உள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு சமூகஅமைப்புகளுக்கும் உள்ளது. எல்லோரும் மனம் வைத்தால் போதைப் பொருள் இல்லாதமாநிலமாக புதுச்சேரியை உருவாக்க முடியும். புதுவையில் மதுவை ஒழிக்கமுடியவில்லை.  மதுவை ஒழிக்க படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக விழாவில்  பள்ளிக் கல்வி இயக்குநர் ருத்ர கவுடு, சமூக நலத்துறைஇயக்குநர் சாரங்கபாணி,புதுச்சேரி சமூக நலவாரியத் தலைவர் வைஜெய்ந்தி,மகளிர்மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குநர் யஷ்வந்தையா ஆகியோர்வாழ்த்துரை வழங்கினர். இதில் சமூக நலவாரிய அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்  கலந்து கொண்டனர்.