கீழவெண்மணி, டிச. 26 - தீண்டாமைக் கொடுமையின் ஆணி வேரை அறுக்க ஒத்தக் கருத்துள்ள ஒரு பரந்த படையை உரு வாக்குவோம் என்று கீழவெண்மணி பொதுக்கூட்டத்தில் கே.பால கிருஷ்ணன் முழங்கினார். நாகை மாவட்டம் கீழவெண்மணி யில் 53- ஆம் ஆண்டு வெண்மணி தியாகிகள் நினைவு அஞ்சலி பொதுக்கூட்டம் டிசம்பர் 25 சனிக் கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்ட செயலாளர் வி.மாரிமுத்து தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாநிலச் செய லாளர் கே. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசுகையில், “கடந்த 53 ஆண்டுகளுக்கு முன்பு நில பிரபுத்துவ வெறியர்கள் மூட்டிய தீ என்றும் அணையாது, நிலப்பிரபுத்துவ வெறியர்களின் ஆதிக்கம் இந்த மண்ணிலேயே சாம்ப லாக்கப்பட்டிருக்கிறது” என்றார். மேலும் அவர் பேசியதாவது: வீரசமர்களின் விளைவாக ஆண்டான் அடிமை என்ற சொல்லை அகராதியில் இருந்து நீக்கிவிட்ட பெருமை இந்த செங்கொடி இயக்கத்திற்கு உள்ளது. அடிமை முறை மட்டுமா? குத்தகை விவசாயிகளை கொடுமை யில் இருந்து மீட்டது, குத்தகை விவசாயிகளின் நிலைமையை தலைகீழாக மாற்றியது செங்கொடி இயக்கம். கீழத்தஞ்சையில் செங்கொடி இயக்கத்தின் தியாக வரலாற்றைச் சொன்னால் ஒரு சுதந்திரப் போராட்ட வரலாற்றைப் போல நீண்டுகொண்டே போகும். காவல்துறையில் அப்போது கிசான் போலீஸ் என்ற ஒரு தனி பிரிவே துவக்கப்பட்டது. நிலப்பிர புத்துவத்திற்கு ஆதரவாக கூலி தொழிலாளர்கள் மீது எத்தனை ஒடுக்குமுறை - அடக்குமுறைகள் ஏவப்பட்டன. அந்த அடக்குமுறை களை எல்லாம் தவிடுபொடியாக்கி யது செங்கொடி இயக்கம்.
இன்றைக்கு இந்த நாட்டிலேயே தீண்டாமையை அகற்றுவது மட்டு மல்ல; ஒத்த கருத்துள்ள ஒரு பரந்த படையை உருவாக்கி தீண்டாமை என்ற ஆணிவேரை அறுக்க வேண்டும் என்று உறுதியாக செயல்படுகிற இயக்கம் தான் செங்கொடி இயக்கம். விவசாயிகள் விரோதச் சட்டங் களை மாற்ற முடியாது என அண்ணா மலை கூறினார். ஆனால் அடுத்த மூன்றாவது நாளில் மோடி மன்னிப்பு கேட்டு சட்டத்தை ரத்து செய்தார். அண்ணாமலை தனது முகத்தை எங்கே போய் தற்போது வைத்துள்ளாரோ? கடந்த 7 ஆண்டுகளில் மோடி ஆட்சி நடைபெறவில்லை; அம்பானி அதானி ஆட்சிதான் நடைபெற்றது. அவர்களுக்கு 10 லட்சம் கோடியை தள்ளுபடி செய்துள்ள மோடி ஆட்சி, 100 நாள் வேலை, வெள்ள நிவாரணப் பணிகளுக்கு பணம் இல்லை என்கின்றது. விவசாய கடனை தள்ளுபடி செய்ய மறுக் கின்றனர். அம்பானி, அதானி ராஜ்ஜிய மாக மோடி அரசு உள்ளது. எனவே மோடி ஆட்சியின் அவலங்களை எதிர்த்து வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி நாடு தழுவிய கிளர்ச்சி நடை பெறுகிறது. இதில் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் கட்சியின் அர சியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன். மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெ.சண்முகம், ஏ.லாசர், கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நாகை மாலி, ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொது செயலாளர் பி.சுகந்தி பேசினர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செய லாளர் கே.சாமுவேல்ராஜ், விவசாய சங்க மாநில தலைவர் வி.சுப்பிர மணியன், பொருளாளர் கே.பி.பெரு மாள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.டில்லி பாபு, கந்தர்வ கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை உள்ளிட்டத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மைதிலி சிவராமன் எழுதிய ‘வெண்மணி: நெஞ்சில் நின்ற தீ’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இதனை மாநில செயற்குழு உறுப்பினர் பெ. சண்முகம் வெளியிட செயற்குழு உறுப்பினர் லாசர் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க நாகை, குடந்தை மண்டலம் குடந்தை சிபிஎம் நகர கமிட்டி, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதி யர்கள் சங்கம் சார்பாக உணவு வழங்கப்பட்டது.