சென்னை, பிப்.7- பழங்குடியினர் ஆராய்ச்சி மைய ஆய்வறிக்கையை தமிழ் நாடு அரசு விரைந்து பெற்று ஒன் றிய அரசுக்கு பரிந்துரைக்க வேண் டும் என சென்னையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயி கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் வலியுறுத்தினார். வேட்டைக்காரன் இனத்தை பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங் குடி மக்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் சென்னையில் பெருந் திரள் முறையீடு போராட்டம் செவ் வாயன்று (பிப். 7) நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் மாநிலத் தலைவர் பெ. சண்முகம் தமது துவக்க உரை யில், “வேட்டைக்காரன் இனத்தை பழங்குடி பட்டியலில் இணைக்க வலியுறுத்தி முதலமைச்சர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர், செயலா ளர், மாவட்ட ஆட்சியர் என அனை வரிடமும் கோரிக்கை மனு கொடுத் தும் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. தனித்தனியாக போராடா மல் அமைப்பாக திரண்டு போராடி னால் மட்டும்தான் கோரிக்கை களை வென்றெடுக்க முடியும்” என்றார்
அதிகாரிகள் அலட்சியம்
முதலமைச்சர்கூட பிப்.6 அன்று ஆதிதிராவிடர் பழங்குடி யினர் நலத் துறை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தை நடத்தி, ஏரா ளமான வழிகாட்டுதல்களை உத்த ரவுகளை வழங்கியிருக்கிறார். முதலமைச்சர் எவ்வளவுதான் ஆர்வம் காட்டினாலும், உத்த ரவு பிறப்பித்தாலும் அதை செயல் படுத்தும் இடத்தில் அதிகாரிகள் உள்ளனர். ஆனால் பட்டியல் சாதியினர், பழங்குடியினர் குறித்த விஷயத்தில் அதிகார வர்க்கம் மிகவும் அலட்சியமாக செயல்படு கிறது என்று குற்றம் சாட்டினார். மாணவர்களின் கல்வி உத வித்தொகை, குடிமனைப் பட்டா, வசிக்கக் கூடிய இடங்களில் முறை யான கட்டமைப்பு வசதிகள் என அனைத்திலும் அலட்சியமாக செயல்படுகிறார்கள். இதற்குரிய அதிகாரிகள் உரிய முறையில் தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் வலி யுறுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். தொடர் போராட்டத்தின் விளை வாக வேட்டைக்காரன் இனம் பழங்குடி இனம்தானா என ஆய்வு செய்வதற்கான உத்தரவை 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பிறப்பித்து, பழங்குடியினர் ஆரா ய்ச்சி மையத்திற்கு அனுப்பியது. ஆராய்ச்சி மைய அதிகாரிகள் வேட்டைக்காரன் மக்களிடையே பல்வேறு மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டனர். மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடத் தப்பட்ட கள ஆய்வு அறிக்கையை தமிழ்நாடு அரசுக்கு அளிக்காமல் அதிகாரிகள் காலதாமதம் செய்து வருகின்றனர்.
புதுச்சேரியில்...
நமது மாநிலத்திற்கு மிக அரு காமையிலுள்ள புதுச்சேரியில் 2014ஆம் ஆண்டு வேட்டைக்காரர் இனம் பழங்குடியினர் பட்டிய லில் சேர்க்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் நடை முறைக்கு வந்து விட்டது. புதுச் சேரியிலுள்ள வேட்டைக்கார ரும் அதன் எல்லையான கடலூரி லுள்ள வேட்டைக்காரரும் வேறு வேறு கிடையாது. எனவே தமிழ் நாடு அரசு உடனடியாக அந்த ஆய்வறிக்கையை பெற்று ஒன்றிய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்றும் பெ.சண்முகம் கேட்டுக் கொண்டார். சங்கத்தின் மாநிலச் செயலா ளர் இ.கெங்காதுரை தலைமை யில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங் கத்தின் மாநிலத் தலைவர் பி. டில்லிபாபு, மாநிலச் செயலாளர் ஆர்.சரவணன், அகில இந்திய ஆதிவாசிகள் தேசிய மேடை மத்தி யக் குழு உறுப்பினர் ஏ.வி.சண் முகம், தமிழ்நாடு வேட்டைக்கா ரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் எம். சேட்டு, பொருளாளர் ஜி.ஏழுமலை ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகள் ஏ.கிருஷ்ணன், பி. லட்சுமணன், ரவிச்சந்திரன், திரு வள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் டி. டில்லி, ஜி.ராஜா, எம்.சுரேஷ், ராணிப்பேட்டை மாவட்ட நிர்வா கிகள் சி.சின்னதுரை, யு.வரத ராஜன், செந்தில்வேலன், வேலூர் மாவட்ட நிர்வாகிகள் கே.சீனிவா சன், டி.ரமேஷ், எஸ்.வெங்கடே சன் உள்ளிட்டு மாநிலம் முழுவதி லும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர்.
நலத்துறை செயலாளர் உறுதியளிப்பு
இதற்கிடையே ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத் துறையின் செயலாளர் டி.லட்சுமி பிரியா அழைப்பை ஏற்று பி.டில்லிபாபு தலைமையில் நிர்வாகிகள் சந் தித்து பேசினர். அப்போது ஒரு வார காலத்திற்குள் ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஆய்வறிக் கையை பெற்று ஒரு மாத காலத் திற்குள் ஒன்றிய அரசுக்கு பரிந் துரை செய்ய நடவடிக்கை எடுக் கப்படும் என லட்சுமி பிரியா உறுதியளித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனை வரும் கலைந்து சென்றனர்.