tamilnadu

சுவர் இடிந்து  விழுந்து பெண் பலி

அறந்தாங்கி, நவ.5- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மேல்மங்கலம் வடக்கு கிராமத்தில் திங்கட்கிழமை பெய்த மழையில் சுவர் இடிந்து விழுந்து அமராவதி(45) என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.  அதிகாலை 4 மணி அளவில் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து நாகுடி காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த காவல்துறையினர், இடிபாடுகளை அகற்றி இறந்து கிடந்த அமராவதி உடலை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

;