அறந்தாங்கி, ஆக.28 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி கிளப் சார்பாக மரம் நடும் விழா நடைபெற்றது. கிளப் தலைவர் விஜய் தலைமை வகித்தார். செயலாளர் அப்துல் பாரி வரவேற்றார். மரக்கன்று நடும் விழாவை விவேக்பழனி ஐ.எப்.எஸ். துவங்கி வைத்து, நகரின் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் மரம் நடுதல் மற்றும் நட்ட மரக்கன்றுகளை பராமரித்தலின் அவசியம் குறித்து உரையாற்றினார். சிறப்பு விருந்தினர் விவேக், திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் திட்டத்தை செயல்படுத்தும் முறைகளை எடுத்துக் கூறினர். விழாவில் உடனடி முன்னாள் தலைவர் கவி கார்த்திக், தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி கிளப் அப்துல் ரஹீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்துல் ரஹீம் நன்றி கூறினார்.