புதுக்கோட்டை, ஆக.21- புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள தனிநப ரின் பட்டா நிலத்தில் புதைக்கப்பட்ட சடலத்தை அகற்றக் கோரி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை யில் மறியல் போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நம்பன்பட்டி யைச் சேர்ந்தவர் ரெங்கசாமி(65). இவருக்கு காத்தான்விடுதியில் விவ சாய நிலம் உள்ளது. இந்நிலையில், காத்தான்விடுதியை சேர்ந்த பிச்சை என்பவர் கடந்த 9-ம் தேதி இறந்து விட்டார். இவரது சடலத்தை பிச்சை மகன் பழனிமுத்து மற்றும் காத்தான் விடுதியைச் சேர்ந்த சுமார் நூற்றுக் கும் மேற்பட்டோர் காத்தான்விடுதி யில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வந்த சுடுகாட்டில் புதைக்காமல் அருகில் உள்ள ரெங்கசாமிக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு புதைத்துள்ளனர்.
தாக்குதல்
இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற ரெங்கசாமி மகன் அர்ச்சுணன், விவசாய நிலத்தில் சட லத்தை புதைப்பதற்கு எதிர்ப்பு தெரி வித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, பழனிமுத்து மற்றும் சுமார் 10-க்கும் மேற்பட்ட நபர்கள் அர்ச்சுணனை தாக்கியுள்ளனர். இதில் அர்ச்சுண னுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அர்ச்சு ணனை மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
அகற்றக் கோரி மறியல்
இதனைத் தொடர்ந்து அர்ச்சு ணன், தாக்கியவர்கள் மீது நட வடிக்கை எடுக்க கோரியும், விவ சாய நிலத்தில் புதைக்கப்பட்ட சட லத்தை அகற்ற கோரியும் ஆலங்குடி காவல் நிலையத்திலும், கறம்பக் குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். எந்த நட வடிக்கையும் எடுக்காததால், நம் பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.துரைச் சந்திரன், ஒன்றியச் செயலாளர் எம்.பாலசுந்தரமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர் சுந்தரமூர்த்தி ஆகி யோர் தலைமையில் ஆலங்குடி–ஆதனக்கோட்டை சாலையில் மறிய லில் ஈடுபட்டனர். போராட்டத்தைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த கறம்பக் குடி வட்டாட்சியர் வில்லியம் மோசஸ், ஆலங்குடி காவல் துணை ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் கட்சித் தலைவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், விவசாய நிலத்தில் புதைக்கப்பட்ட சடலத்தை 5 நாட்களுக்குள் அகற்றுவதாக உறுதியளிக்கப்பட்டது.