tamilnadu

கொரோனா தொற்று உள்ளதாக  அவதூறு பரப்பிய 3 பேர் கைது

 புதுக்கோட்டை, மார்ச் 23- கொரோனா தொற்று உள்ளதாக வாட்ஸ் அப்பில் அவதூறு செய்தி பரப்பிய விராலிமலை பகுதியை சேர்ந்த அய்யப்பன், ராஜ்குமார் மற்றும் அறந்தாங்கி பகுதியை சேர்ந்த பழனிவேல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் தனிக்குழு அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்களுக்கு தேவையற்ற பீதியை ஏற்படுத்தும் வகையில் கொரோனா பரவுவதாக அவதூறான தகவல்களை பதிவிடுதல் மற்றும் பகிர்தலை தவிர்க்க வேண்டும் என புதுக்கோட்டை ஆட்சியர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.

;