tamilnadu

img

போராடிய துப்புரவுத் தொழிலாளர்களை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்

அறந்தாங்கி, டிச.24- கடந்த 11-10-2017 அன்று அரசாணைப்படியும், புதுக் கோட்டை மாவட்ட ஆட்சி யர் உத்தரவின்படியும் சம்ப ளம் வழங்கிட கோரியும், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி அலு வலகம் முன்பு கடந்த 17 ஆம் தேதி உள்ளாட்சி தொழிலா ளர் சங்கம் (சிஐடியு) சார்பாக உள்ளாட்சி தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவரும், சிபிஎம் முன்னாள் மாவட்டச் செயலாளருமான ப.சண் முகம் தலைமையில் துப்புரவு ஒப்பந்த தொழிலாளர்கள் போராடி கொண்டிருந்த போது அங்கு வந்த அதிமுக, பிஜேபி நிர்வாகிகள் என்ற பெயரில் போராடியவர்களை மிரட்டி அராஜகம் செய்த வர்கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு சிபிஎம் தாலுகா செயலாளர் தென்றல் கருப்பையா தலை மை வகித்தார். சிபிஎம் முன்னாள் மாவட்டச் செயலா ளர் ப.சண்முகம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணைச் செயலாளர் கவி பாலா, வாலிபர் சங்க மாவட் டத் தலைவர் ஆர்.கர்ணா ஆகியோர் கண்டன உரை யாற்றினர். சிபிஎம் தாலுகா குழு உறுபினர்கள் தங்கராஜ், கணேசன், மேகவர்ணம் உள்பட ஏராளமான துப்புரவு தொழிலார்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

;