tamilnadu

ஆலங்குடியில் நடந்த தாக்குதலை மதப் பிரச்சனையாக மாற்றக் கூடாது சிபிஎம் வேண்டுகோள்

புதுக்கோட்டை, ஜூலை 17- ஆலங்குடியில் நடந்துள்ள தாக்கு தல் மதப்பிரச்சனையாக மாற்றப்படு வதை தடுக்க வேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.  இதுகுறித்து கட்சியின் புதுக் கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ். கவிவர்மன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மாங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் முருகானந்தம். இவர் ஆலங்குடி பாரதி தாசன் சாலையில் பிளக்ஸ் கடை வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த  ஞாயிற்றுக்கிழமை இரவு மர்மக் கும்பல் ஒன்று முருகானந்தம் மற்றும் அவரது தந்தை ஆகியோரை அரிவாளால் தாக்கி விட்டு தப்பி ஓடி உள்ளது. இதில், படு காயமடைந்த இருவரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  தாக்குதல் நடத்தியவர்கள் இஸ்லா மியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிந்த முருகானந்தம், உற வினர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற் பட்டோருடன் இஸ்லாமியர்கள் வசிக் கும் பகுதிகளுக்குள் புகுந்து அவர்கள் நடத்தி வந்த வணிக நிறுவனங்களை அடித்து நொறுக்கியுள்ளனர். பள்ளி வாசல் மீதும் கற்களை வீசி தாக்கியுள்ள னர். மேலும், திங்கள்கிழமையன்று புதுக்கோட்டைக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த முஸ்தபா என்ற இளை ஞரை இடையில் மறித்து கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவங்களைத் தொடர்ந்து திருச்சி டிஐஜி பாலகிருஷ்ணன், புதுக் கோட்டை எஸ்பி செல்வராஜ் தலைமை யில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். இரண்டு தரப்பிலும் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ள னர். தந்தையையும் மகனையும் தாக்கி யதாக ஆலங்குடி கலிபுல்லா நகரச் சேர்ந்த அப்பாஸ்(30), பள்ளிவாசல் தெருவைத் சேர்ந்த அப்துல்ரகுமான் (21), ஹக்கீம்(23) மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹக்கீம்(22) ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

மத மோதலுக்கு வழிவகுக்க வேண்டாம்
இச்சம்பவம் முழுக்க முழுக்க தனிப் பட்ட வரவு-செலவு பிரச்சனையில் ஏற்பட்ட தாக்குதல் என்பதே எங்களின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. முருகானந்தம் டிடிவி.தினகரன் கட்சி யான அமமுகவில் இருந்துள்ளார். ஆனால், மிக சமீபத்தில் முருகானந்தம் இந்து முன்னணியில் இணைந்து ஆலங்குடி நகர நிர்வாகி ஆகியிருக்கி றார் என தெரிகிறது. எனவே, இந்த தாக்குதல் இந்துக்கள் மீதான வெறுப்பில் நடந்துள்ளது என்றும் சித்தரிக்கும் முயற்சி நடைபெறுகிறது. இதை ஒருபோதும் அனுமதிக்க முடி யாது. தாக்குதல் நடத்தியவர்கள் மீதும், தவறிழைத்தவர்கள் மீதும் பாரபட்ச மின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் இருவேறு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. காவல்துறை உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை காரணமாக வைத்து இரண்டு சமூகத்தினருக்கு இடை யிலான மத மோதலாக மாறாமல் மாவட்ட நிர்வாகமும், காவல்துறை யினரும் தடுத்து நிறுத்த வேண்டும். ஆலங்குடி பகுதியில் வசிக்கும் அனைத்துத் தரப்பினருக்குமான பாதுகாப்பை அரசு நிர்வாகம் உத்தர வாதப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.