கோடை விடுமுறைக்குப் பிறகு செயல்படத் தொடங்கிய நீதிமன்றங்கள்
கோவை, ஜூன் 3- கோடை விடுமுறைக்குப் பிறகு கோவையில் நீதி மன்றங்கள் செயல்படத் தொடங்கின. கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 55க்கும் மேலான நீதிமன்றங்கள் உள்ளன. இது தவிர பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம், சூலூர், மதுகரையிலும் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின் றன. இந்த நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு முக்கிய நீதிமன்றங்கள் மட்டும் செயல் பட்டன. இந்நிலையில் விடுமுறை முடிந்து திங்களன்று முதல் நீதிமன்றங்கள் செயல்பட தொடங்கின பல வழக்குகள் விசாரணை நடத்தப்பட்டு தள்ளி வைக்கப்பட் டன. சில வழக்குகளில் விரைவில் தீர்ப்பு கூறப்பட உள்ளது.
பணப்பலன்களை வழங்கக்கோரி பிஎஸ்என்எல்இயு ஆர்ப்பாட்டம்
கோவை, ஜூன் 3- பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு, பணப்பலன்களை வழங்கக் கோரி, பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தினர் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத் தில் பணியாற்றி வந்த பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 1500 பேர் விருப்ப ஓய்வு பெற்றனர். விருப்ப ஓய்வு பெற்ற வர்களுக்கு சாதி சான்றிதழ் (எஸ்டி) மறு ஆய்வு என்று சொல்லி, ஐந்து ஆண்டுகளாக ஓய்வூதிய பலன்கள் மற்றும் ஓய்வூதியம் வழங்காமல் நிர்வாகம் மறுக்கின் றது. பிஎஸ்என்எல் நிர்வாகத்தின் அடாவடித்தனத்தை கண்டித்தும், ஓய்வூதிய பலன்கள் மற்றும் ஓய்வூதியம் வழங்கக்கோரி திங்களன்று கோவை பிஜிஎம் அலுவ லகம் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இதில், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநிலத் தலை வர் மகேஸ்வரன், பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதியர் சங்க தமிழ் மாநில அமைப்பு செயலாளர் பி.எம்.நாச்சிமுத்து, மாநில உதவி செயலாளர் டி.கே.பிரசன்னா மற்றும் அகில இந்திய அமைப்புச் செயலாளர் வி.வெங்கட்ரா மன் மற்றும் ஏ.குடியரசு உள்ளிட்டோர் உரையாற்றினர். முடிவில், பொருளாளர் சாஹின்அகமது நன்றி கூறினார். இதேபோன்று பொள்ளாச்சி, சூலூர் உள்ளிட்ட பிஎஸ் என்எல் அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.
விபத்து தடுப்புப்பணிகள் குறித்து ஆய்வு
நாமக்கல், ஜூன் 3- நாமக்கல், புதன்சந்தை பகுதியில் விபத்து தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ச.உமா செவ்வா யன்று ஆய்வு செய்தார். நாமக்கல் மற்றும் மோகனூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ச.உமா, செவ்வாயன்று வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து, புதன் சந்தை தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படாத வகையில் மேற்கொள்ளப்பட வேண் டிய விபத்து தடுப்புப்பணிகள் குறித்தும், பொம்மை குட்டை மேடு மற்றும் செல்லப்பம்பட்டி ஆகிய பகுதிக ளில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் எளி தாக சாலையை கடக்கும் வகையில் மேம்பாலம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அப்போது, தேசிய நெடுஞ் சாலை பகுதிகளில் தலைக்கவசம் அணியாமல் இருசக் கர வாகனங்களை ஓட்டி வந்தவர்களுக்கு, சாலை விதி களை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி னார்.
தமிழக எம்.பி.,களுக்கு தில்லியில் தனி மரியாதை
நாமக்கல், ஜூன் 3- தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதுதில்லியில் தனி மரியாதை உள்ளதென, திமுக மாநிலங்களவை உறுப்பி னர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி உள்ளிட்ட நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாயன்று நடைபெற்றுது. இதில் கலந்துகொண்ட திமுக துணைப் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா பேசுகை யில், ஓலை குடிசையில் வசித்தவர்களுக்கு வீடு வழங்கியவர் கலைஞர். அதுபோல் இப்போது கலைஞர் கனவு இல்லம் திட்டம் ஏழை, எளிய மக்களுக்கு பயன்படுகிறது. மற்ற மாநி லங்களுக்கு தமிழ்நாடு முன்மாதிரியாக திகழ்கிறது. எல்லோ ரும் பயன்பெறும் வகையில் ஆட்சியை ஸ்டாலின் நடத்தி வரு கிறார். புதுதில்லியில் தமிழகத்திலிருந்து செல்லும் நாடாளு மன்ற உறுப்பினர்களுக்கு தனி மரியாதை உள்ளது, என் றார். இந்நிகழ்வில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.இராம லிங்கம், திமுக மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் உட் பட பலர் கலந்து கொண்டனர்.
கர்நாடகாலிருந்து தண்ணீர் திறப்பு ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தருமபுரி, ஜூன் 3- கர்நாடகா அணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்ட தால், ஒகேனக்கலுக்கு நீர்வரத்து விநாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் கேரளம், கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வரு கிறது. இதன் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணை கள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில், கிருஷ்ண ராஜ சாகர் அணையில் இருந்து 722 கனஅடியும், கபினி அணை யில் இருந்து 8 ஆயிரம் கனஅடியும் என மொத்தமாக 8 ஆயி ரத்து 722 கனஅடி தண்ணீர் தமிழக காவிரி ஆற்றில் உபரிநீராக திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வருகிறது. அதன் படி, திங்களன்று விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, செவ்வாயன்று காலை 8 மணி நிலவரப்படி விநா டிக்கு 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதன் காரண மாக மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக - கர்நாடகா எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் போலீசார், வருவாய்த் துறையினர், தீயணைப்பு மீட்பு படையினர் மற்றும் ஊர்க்கா வல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரூ.20 லட்சம் மதிப்புடைய காரை திருடியவர் கைது
கோவை, ஜூன் 3- கார் வாங்குவது போல் நடித்து, கோவையிலுள்ள ஷோருமில் புகுந்து 20 லட்சம் ரூபாய் எலக்ட்ரானிக் காரை திருடிச் சென்றவரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம், சிங்காநல்லூர் - திருச்சி சாலையில் தனியார் கார் ஷோரூம் உள்ளது. இந்த ஷோரூமில் சரவணகுமார் என்பவர் கார் டெலிவரி செய்யும் பொறுப்பாளராக வேலை செய்து வருகிறார். இவர் ஷோரூம் மற்றும் அதன் அருகே நிறுத்தப்பட்ட கார்களை ஆய்வு செய்தார். அதில் ஒரு கார் மாயமாக இருந்தது. உடனே அவர் அந்த ஷோரூமில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சோதனை செய்தார். அப்பொழுது ஒரு காரின் அருகே அடையாளம் தெரியாத நபர் வந்து நிற்பதும், பின்னர் சிறிது நேரம் அந்த காரை சுற்றி, சுற்றி வருவதும் தொடர்ந்து அந்த காரை திருடி செல்வதும் பதிவாகி இருந்தது. அந்த காரின் மதிப்பு ரூபாய் 20 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த திருட்டு குறித்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஷோரூமில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை செய்தனர். அதில் காரை திருடி சென்றவர், அந்த ஷோரூம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து போலீசார் பெட்ரோல் பங்கு ஊழியர்களிடம் மோட்டார் சைக்கிள் யாருடையது? எடுக்க வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி கூறினார். அதன்படி அந்த பெட்ரோல் பங்கில் நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை எடுக்க ஒரு நபர் வந்தார். உடனே ஊழியர்கள் அந்த நபரை பிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கந்து கவுண்டன் பாளையத்தைச் சேர்ந்த கர்ணன் என்பதும், ஷோரூம் சென்று எலக்ட்ரிக் காரை திருடிச் சென்றதும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் கர்ணனை கைது செய்தனர்.