கர்நாடக அரசுக்கு நோட்டீஸ்
பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான விவகாரம்
பெங்களூரு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 18 ஆண்டுகளில் முதன் முறையாக பெங்களூரு (ஆர்சிபி) அணி கோப்பையை வென்றதால் அந்த அணியின் ரசி கர்கள் கர்நாடகா முழுவதும் கொண் டாட்டங்களில் ஈடுபட்டனர். புதன் கிழமை அன்று பெங்களூரு திரும் பிய ஆர்சிபி அணியினரை விமான நிலையத்துக்குச் சென்று கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் வரவேற்றார். தொட ர்ந்து பெங்களூரு வீரர்கள் கர் நாடகாவின் தலைமைச் செயலக மான விதான சவுதாவுக்கு அழை த்து வரப்பட்டனர். பிறகு பெங்க ளூரு அணி வீரர்கள், சின்னசாமி மைதானத்தில் நடந்த பாராட்டு விழாவிலும் கலந்து கொண்டனர். அப்போது, பெங்களூரு அணி வீரர் களை பார்ப்பதற்காக சின்னசாமி மைதானம் முன்பு லட்சக்கணக் கான மக்கள் திரண்டனர். இதனால் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரு கின்றனர். பெங்களூரு கூட்ட நெரி சல் சம்பவம் குறித்து “இயற்கைக்கு மாறான மரணம்” என வழக்குப் பதிவு செய்து கர்நாடக காவல்துறை யினர் விசாரணை நடத்தி வரு கின்றனர். உயர்நீதிமன்றம் நோட்டீஸ் இந்நிலையில், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத் திய பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கர்நாடகா உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க முடிவு செய்துள்ளது. அவசர வழக்காக வியாழனன்று மதியம் உயர்நீதிமன்ற நீதிபதி கள் வி.காமேஸ்வர் ராவ் (பொறுப்பு தலைமை நீதிபதி) மற்றும் நீதிபதி சி.எம்.ஜோஷி ஆகியோர் அடங் கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சசி கிரண் ஷெட்டி,”நாங்கள் அனை த்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். நாங்கள் ஒரு அறிக் கையை சமர்ப்பிப்போம். அதாவது நாங்கள் என்ன செய்தோம், என்ன நடந்தது என்பதை உண்மை களின் அடிப்படையில் மட்டுமே வைப்போம்” என்று அவர் கூறி னார். இதனை தொடர்ந்து உயர்நீதி மன்ற நீதிபதிகள்,”பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கர்நாடக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன் பின்னர் ஜூன் 10ஆம் தேதி மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்” என உத்தரவிட்டனர். மனித உரிமைகள் ஆணையமும்... மேலும், பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணை யம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. பெங்களூரு மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையருக்கு நோட்டீஸ் அளிக் கப்பட்டுள்ளது. நோட்டீஸில் பெங்களூரு சம்பவம் தொடர்பாக 7 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு அணி நிர்வாகம் ரூ.10 லட்சம் இழப்பீடு
வெற்றி விழா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவ தாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் இந்த சோக சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவுவதற்காக “ஆர்சிபி கேர்ஸ் (RCB Cares)” என்ற நிதியத்தையும் உருவாக்கியுள்ளோம் என பெங்களூரு அணி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் (யுஎஸ்எல்) என்ற மதுபான நிறுவனம் பெங்களூரு அணி உரிமை யாளராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்துச் செலவுகளையும் அரசு ஏற்கும் பெங்களூரு மைதானத்தில் புதன்கிழமை அன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களின் அனைத்து மருத்து வச் செலவுகளையும் கர்நாடகாவின் சித்தராமையா அரசு ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என புத னன்று அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நெரிசல் ஏற்பட்டது எப்படி?
சென்னை நுங்கம்பாக்கம் மைதான வாசல் போன்று தான் பெங்களூரு சின்னசாமி மைதான வாசலும் இருக்கும். சின்ன சாமி மைதானத்திற்குள் வெறும் 30,000 பேர் மட்டுமே அமர முடி யும். ஆனால் மைதான வாசலில் 2.5 லட்சம் பேர் கூடியுள்ளனர். இத னால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பாஸ் வழங்கியது யார்?
மிக முக்கியமாக கூட்ட நெரிசலுக்கு மைதான நுழைவு பாஸ் வழங்கியதே மிக முக்கிய காரணம் ஆகும். பாஸ் இருந்தால் மட்டுமே மைதானத்திற்குள் நுழைய முடியும் என ஒரு தகவல் பரவி இருந்தது. உடனே பாஸ் வாங்க வேண்டும் என சின்ன சாமி மைதானத்திற்குள் ஒரு கூட்டம் நுழைய தீவிர நெரிசல் ஏற் பட்டது. இதுதான் கூட்ட நெரிசலுக்கு மிக முக்கிய காரணம் ஆகும். ஆனால் பாஸ் அறிவிப்பு வெளியிட்டது யார்? பாஸ் வழங்கியது யார்? என்பது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.