health-and-wellness

img

உணவு விற்பனை குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

உணவு விற்பனை தொடர்பாக 14 வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு வெளியிட்டு, வணிகர்கள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் உணவு விற்றாலோ, தயாரித்தாலோ கடும் நடவடிக்கை என உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
1.    உணவு பாதுகாப்பு மற்றும் தர சான்றிதழ் (FSSAI) பெறல் கட்டாயம்.
2.    அனைத்து உணவு வணிக நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு டைபாய்டு மற்றும் மஞ்சள் காமலை உள்ளிட்ட நோய்களுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தி, மருத்துவத்
3.    அறைகளில் சுத்தமான நீர் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
4.    பணியாளர்கள் கை கழுவும் பழக்கத்துடன் இருக்க வேண்டும்; கையுறை மற்றும் தலைக்கவசம் கட்டாயம்.
5.    மீன், இறைச்சி போன்ற பொருட்கள் உரிய குளிர்சாதன வசதியில் வைத்திருக்க வேண்டும்.
6.    உணவுப் பொருட்களை ஈக்கள்/பூச்சிகள் மொய்க்காதவண்ணம் கண்ணாடி பெட்டியில் மூடி வைத்து, காட்சிபடுத்த வேண்டும்..
7.    குப்பைகள் தனித்தனியாக சேகரிக்கப்பட்டு முறையாக அகற்றப்பட வேண்டும்.
8.    உணவுகள் முழுமையாக வேகவைக்கப்பட்டிருக்க வேண்டும் (அதிக வெப்பநிலைக்கு).
9.    மீதமுள்ள உணவுகளை மீண்டும் பயன்படுத்தக் கூடாது.
10.    தடைசெய்யப்பட்ட கலப்பட உணவுகள், ரசாயனங்கள், செயற்கை வண்ணங்கள் பயன்படுத்தக்கூடாது.
11.    நியூஸ் பேப்பர் போன்ற அச்சிட்ட காகிதங்களில் உணவுப் பொருளில் நேரடியாகப்படும் வகையில் பரிமாறவோ/பொட்டலமிடவோ கூடாது. பயோடிகிரேடபிள் அல்லது காகித உபகரணங்கள் பயன்படுத்த ஊக்கமளிக்கப்படுகிறது.
12.    உணவுகளின் உற்பத்தி தேதி மற்றும் காலாவதி தேதி ஆகியவை குறிப்பிடப்பட வேண்டும்.
13.    உணவு சமைக்க மற்றும் நொறுக்குத் தீனிகள் தயாரிக்க அயோடின் கலந்த உப்பு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
14.    உணவகங்கள்/பேக்கரி/இனிப்பகங்கள் உள்ளிட்ட உணவு நிறுவனங்களில் அயோடின் கலக்காத உப்பு இருக்கக்கூடாது ,  தொடர்ந்து பரிசோதனைக்கு உணவுகள் மற்றும் மூலப்பொருட்கள் அனுப்பப்படும்
உணவு வணிகர்கள் மேற்கூறியவற்றை தவறாது பின்பற்றிட வேண்டுமென அறிவிக்கப்படுகின்றது. தவறும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை அறிவிப்பு.