tamilnadu

img

கோவில் தேரோட்டம் 

 பொன்னமராவதி, ஆக.13- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அழகிய நாச்சியம்மன் கோவிலில் ஆடித் தேரோட்டம் நடை பெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக் கிழமை காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கப்பட்டு நாள்தோறும் உபயதாரர்களால் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து 10 நாள் விழாவில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மன் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். நிகழ்ச்சி, கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராஜா அம்பலக்காரர், சேதுபதி அம்ப லக்காரர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. தொட்டியம்பட்டி, காமராஜர் நகர் உள்ளிட்ட ஏராளமான ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.