பொன்னமராவதி, ஆக.3- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக்கூட்டம் திருப்பணிக்குழு தலைவர் முத்துக்கருப்பன் தலைமையில் நடைபெற்றது. கோவில் செயல் அலுவலர் வைரவன் வரவேற்றார். திருப்பணிக்குழு செயலாளர் ராஜா அம்பலகாரர், பொருளாளர் ராகசெல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நாட்டார்கள், நகரத்தார்கள், மண்டகப்படிதாரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் வரும் ஆவணி மாதம் 22 ஆம் தேதி(08-09.2019 ) அன்று நடைபெறவிருக்கும் குடமுழுக்கு விழா ஏற்பாடு, பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. கோவில் திருப்பணிக்குழு நிர்வாகிகள் முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் ஜெயராமன், கொப்பனாப்பட்டி முன்னாள் தலைவர் மாரிமுத்து, மோகனா சேகர், அழகப்பன் அம்பலம், கட்டுப்பட்டி முன்னாள் தலைவர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருப்பணிக்குழு நிர்வாகி நாகராஜன் நன்றி கூறினார்.