அறந்தாங்கி, ஜூலை 25- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு ஆட்சியர் உமாமகேஸ்வரி தலைமை வகித்தார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி வரவேற்பு ரையாற்றினார் சட்டமன்ற உறுப்பினர் ரெத்தினசபாபதி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சங்க தலைவர் வைரமுத்து அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் திராவிட செல்வன் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் திருநாவுக்கரசர் உள்ளி ட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் அறந்தாங்கி தொகுதி க்குட்பட்ட 18 அரசு பள்ளி மாணவ, மாண விகள் 7230 பேருக்கு மடிக்கணினியை சுகாதா ரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமை ச்சர் சி.விஜயபாஸ்கர் வழங்கி வாழ்த்தி பேசி னார். நிறைவாக தலைமையாசிரியை கார்த்திகா நன்றி கூறினார்.