பொன்னமராவதி, மே 31- மே மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யக் கூடாது என வலியுறுத்தி புதுக்கோட்டை பொன்னமராவதி அரசு பணிமனை முன்பு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் எல்.பி.எப் மத்திய சங்க தலைவர் ஏ.அடைக்கலம் தலைமை யில் நடைபெற்றது. சிஐடியு பொறுப்பாளர்கள் பாலமுரு கன், மணிவேல், ரவிச்சந்திரன், ராம லிங்கம், முருகேசன், எல்.பி.எப்., ஏ.ஏ.எல்.எல்.எப் உள்ளிட்ட தொழிற்சங் கங்களை சேர்ந்த ஏராளமான தொழி லாளர்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து அங்கு வந்த அரசு போக்கு வரத்து கழக பொதுமேலாளர் ஆர்.இளங்கோவன், துணை மேலாளர் ஆதப் பன், கிளை மேலாளர் டி.இளங்கோ உள்ளிட்டோர் தொழிலாளர்கள் மத்தியில் கோரிக்கை குறித்து கேட்டறிந்து அர சிடம் எடுத்துச் சென்று நடவடிக்கை எடுக் கப்படும் என உறுதியளித்தனர்.