புதுக்கோட்டை, நவ.20- பள்ளிக்குச் செல்லும் தனது மகனுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்காததால் ஆட்சியர் அலுவலகத்தில் தங்கிப் படிக்க அனுமதிக்குமாறு புதுக் கோட்டை மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரியிடம் ஒருவர் கோரிக்கை மனு அளித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடப்பு கல்வி ஆண்டுக்கான இலவச பேருந்துப் பயண அட்டை இதுநாள் வழங்கப் படவில்லை. இதனால், கிராமப் புறங்களில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் பேருந்தில் பயணச் சீட்டு வாங்கியோ அல்லது அவ்வழியாகச் செல்லும் வாகனங்களில் அனுமதி கேட்டோ பள்ளிக்குச் சென்று வருகின்றனர். இந்நிலையில், அறந்தாங்கியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி யரிடம் செவ்வாய்க்கிழமையன்று ஒரு மனுவை அளித்தார். அதில், தனது மகன் முகிலன் புதுக்கோட் டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். அவனுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் இருந்து மாணவர்களு க்கு வழங்க வேண்டிய இலவச பேருந்து பயண அட்டை இதுநாள்வரை வழங்கப்படவில்லை. இதனால், தினமும் பேருந்தில் பயணச்சீட்டு வாங்கி பள்ளிக்குச் சென்று வருகிறான். தினமும் பேருந்துக்கு பணம் கொடுத்து அனுப்பும் அளவு க்கு எங்களுக்கு பொருளாதார வசதி இல்லை. எனவே, எனது மகனுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் வரை தாங்கள் அலுவலகத்தி லோ அல்லது வட்டாரப் போக்குவரத்து அலுவல கத்திலோ தங்கி பள்ளிக்குச் சென்றுவர இடவசதி செய்துதருமாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி, அரசுப் போக்குவரத்து அதிகாரிகளை அழைத்து மனு தொடர்பாக உடனடியாக நடவ டிக்கை எடுக்க உத்தரவிட்டார்.