tamilnadu

img

பிஎஸ்என்எல் தொழிலாளர்களுக்கு நிவாரணம்

புதுக்கோட்டை, மே 26- மத்திய அரசின் ஊழியர் விரோத நடவ டிக்கையின் காரணமாக பிஎஸ்என்எல் துறை யில் பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலா ளர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. தற்பொழுது ஊரடங்கு முடக்கத் தின் காரணமாக அவர்கள் மேலும் கடு மையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கவிஞர் நா.முத்துநிலவ னின் முன்முயற்சியால் புதுக்கோட்டை மரம் அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் பேரா.விஸ்வநாதன், மாலதி, கீதா, ஆவு டையப்பன், சோலையப்பன், இலக்கியா, சங்கரன் உள்ளிட்டோர் இணைந்து 27 குடும்பங்களுக்கும் தலா ரூபாய் ஆயிரம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.  நிகழ்ச்சியில், பிஎஸ்என்எல் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பாளர் மு. மல்லிகா, பிஎஸ்என்எல்இயு கிளைச் செயலா ளர் ராஜேந்திரன், ஒப்பந்த ஊழியர் சங்க நிர்வாகி கல்லடியான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.