புதுக்கோட்டை, பிப்.10- தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் நடைபெறும் நான்காவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா பிப்.14-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் விழாக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தது: புத்தகத் திருவிழா நாள்தோறும் காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. புத்தக கண்காட்சி திறப்பு விழாவிற்கு கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமை வகிக்கிறார். புத்தகக் கண்காட்சியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைக்கிறார். தமிழக அரசின் தொல்லியல் துறையால் நிறுவப்படும் ‘கீழடி’ அரங்கத்தை மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி, விண்வெளி அதிசயத்தை விளக்கும் கோளரங்கத்தை பெ.வே.அருண்சக்திகுமார் ஆகியோர் தொடங்கி வைக்கிறார். புத்தகத் திருவிழாவில் ஆனந்தவிகடன், பாரதி புத்தகாலயம், காலச்சுவடு, நக்கீரன், நியூ செஞ்சுரி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் 60 அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்களை பார்வைக்கு வைக்கப்பட உள்ளன. குறிப்பாக போட்டித் தேர்வுகளை எழுதுபவர்களுக்கு வசதியாக தமிழ்நாடு பாடநூல் கலழகத்தின் சார்பில் அரங்கம் அமைக்கப்பட உள்ளது. இங்கு 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான அனைத்து வகுப்பு புத்தகங்களும் கிடைக்கும். விற்பனையிலும் சலுகைகள் அளிக்கப்பட உள்ளது. குறிப்பாக மாணர்களுக்கு கூடுதலான கழிவுகளில் புத்தகங்கள் விற்கப்பட உள்ளது. கீழடி அரங்கம் தமிழனின் தொண்மையான நாகரிகத்தை பறைசாற்றும் ‘கீழடி’ கண்காட்சி அரங்கம் தமிழக அரசின் தொல்லியல் துறையால் நிறுவப்பட உள்ளது. குழந்தைகளுக்கான கோளரங்கமும் கண்காட்சியில் இடம்பெறுகின்றன. விண்வெளி அசியத்தை மாணவர்களுக்கு விளக்கும் வகையில் கோளரங்கமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகர்மன்ற கூட்ட அரங்கில் தினசரி காலை வேளையில் பள்ளி மாணவர்களோடு, அறிவியல் விஞ்ஞானிகளின் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளும், மாணவர்களுக்கான எளிய அறிவியல் பரிசோதனை பயிற்சிகளும், அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. மாணவர்களை பள்ளி, கல்லூரிகளில் இருந்து அழைத்துவருவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டள்ளன. தினந்தோறும் மாலையில் திறந்தவெளி மேடையில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளோடு படைப்பாளிகள், விஞ்ஞானிகள், உடகவியலாளர்கள், கல்வியாளர்கள், திரைப்படத்துறையினர், இலக்கிய சொற்பொழிவாளர்கள் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர். ஊர்கூடித் தேர் இழுப்பதைப் போன்ற இந்த புத்தகத்திருவிழாவிற்கு அனைத்துத்தரப்பினரும் ஒத்துழைப்புத் தரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். பிரச்சாரம் இப்புத்தகத் திருவிழா குறித்து பிரச்சாரம் செய்வதற்காக பிரத்யேக ஒலி, ஒளி வசதியுடன்கூடிய பிரச்சார வாகனம் மாவட்டம் முழுவதும் வலம்வர உள்ளது. இந்தப் பிரச்சாரன வாகனத்;கி வைக்கப்பட்டது. புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. கவிஞர் தங்கம்மூர்த்தி கொடி அசைத்து பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் கம்பன் கழகச் செயலாளர் சம்பத்குமார் புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் நா.முத்துநிலவன், அ.மணவாளன், ஆர்.ராஜ்குமார், எல்.பிரபாகரன், க.சதாசிவம், எம்.வீரமுத்து, மு.முத்துகுமார் மற்றும் பேரா.விஸ்வநாதன், எஸ்.இளங்கோ மு.கீதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.