tamilnadu

அன்னவாசல் மக்களுக்கு அடிப்படை வசதி செய்து தருக! மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

 புதுக்கோட்டை, ஜூலை 31-  புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அன்னவாசல் நகரக் கிளைச் செய லாளர் எஸ்.சோலையன் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.ஜோஷி முன்னிலை வகித்தார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஸ்ரீதர், கே.சண்முகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அவர்களிடம் அன்னவாசல் கிளையின் சார்பில் கட்சியின் வளர்ச்சி நிதியாக ரூ.5 ஆயி ரம் வழங்கப்பட்டது. கோரிக்கைகளை விளக்கி ஒன்றியச் செய லாளர் எம்.ஆர்.சுப்பையா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பலர் பேசினர்.  அன்னவாசல் பகுதியில் உள்ள அனைத்துப் பகுதி மக்க ளுக்கும் காவேரி குடிநீர் சீரான முறையில் கிடைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். அன்னவாசல் கடைவீதி ரோடு, மருத்துவமனை அருகில், பள்ளி அருகில் வேகத்தடை அமைக்க வேண்டும். அன்னவாசல் அரசு மருத்துவமனையை கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள், கூடுதல் படுக்கை வசதியுடன் மேம்படுத்த வேண்டும். கஜா புயலில் பாதிக்கப் பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

;