tamilnadu

img

பள்ளி துவக்க நாளில் குழந்தைகளுக்கு வரவேற்பு

புதுக்கோட்டை, ஜூன் 3-புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வராமெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் பள்ளி துவக்க நாளில் மழலைக் குழந்தைகளுக்கு மாலையணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பள்ளி நுழைவு வாயிலில் பலூன் மற்றும் பனையோலை தோரணங்கள் கட்டப்பட்டு முதல்நாள் பள்ளிக்கு வரும் அனைத்துக் குழந்தைகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. புதிதாக பள்ளியில் சேர்ந்துள்ள மழலைக்குழந்தைகளுக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி மாலையணிவித்து இனிப்பு மற்றும் பலூன் வழங்கி வரவேற்றார். மேலும் விளையாட ஆர்வமான குழந்தைகள் ஊஞ்சல்,கைப்பந்து, உள்ளே வெளியே ஆகிய விiளாட்டு உபகரணங்களைப் பயன்படுத்தி முதல் நாள் பள்ளி வருகையை மழலைக்குழந்தைகள் கொண்டாடி மகிழ்ந்தனர். விழாவில் பள்ளியின் ஆலோசகர் அஞ்சலிதேவி தங்கம்மூர்த்தி, துணைமுதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, ரம்யாஉள்ளிட்டோர் பங்கேற்றனர்.