tamilnadu

img

அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் உதவியாளர் விபத்தில் மரணம்

 

புதுக்கோட்டை, ஜன.12- மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் தனி  உதவியாளர் பவ்(எ)வெங்கடேசன் சனிக்கிழமை இரவு விபத்தில் அகால மரணமடைந்தார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி  உதவியாளராக பணியற்றி வந்தவர்  பவ்(எ)வெங்கடேசன். அதிமுகவில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டத் தலைவராகவும் பணியாற்றினார். இந்நிலை யில் புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற உள்ளாட்சி மறைமுகத் தேர்தல்களில் பங்கேற்றுவிட்டு இரவு  சென்னைக்கு சென்ற அமைச்சர் விஜயபாஸ்கரை திருச்சி  விமான நிலையத்தில் விட்டு விட்டு பொலிரோ காரில் அவரது சொந்த ஊரான பரம்பூருக்கு சென்றுகொண்டிருந்தார்.  அப்போது கிளிக்குடி வீரபெருமாள்பட்டி அருகே சாலை யில் சென்று கொண்டிருந்த கார் தீடீரென  எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அமைச்சரின் தனி  உதவியாளர் பவ்(எ) வெங்கடேசன் மற்றும் காரை ஓட்டிச்சென்ற இடையபட்டியைச் சேர்ந்த செல்வம்(38)  இருவ ரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.  இதனையடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த வெங்கடேசன் மற்றும் செல்வம் இருவரின்  உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். பவ்(எ)வெங்கடேசனின் உடல் இலுப்பூர் அரசு  மருத்துவமனையிலும் ஓட்டுநர் செல்வத்தின் உடல்  புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யிலும் உடற்கூராய்விற்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

;