tamilnadu

காவிரி- குண்டாறு திட்டப் பணியை  விரைவுபடுத்திட நடவடிக்கை

புதுக்கோட்டை, மே 12- காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டப் பணிகளை விரைவுபடுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தெரிவித்துள் ளார். இணைப்பு திட்ட பணி கள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்குப் பிறகு அவர் தெரிவித்துள்ளது: புதுக்கோட்டை மாவட்ட மக்களின் 100 ஆண்டு கால கனவுத்திட்டம் காவிரி-வைகை-குண்டாறு இணை ப்புத்திட்டம். இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.7,677 கோடி. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 12 தாலுக்காக்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிரா மங்கள் இதன் மூலம் பயன டைய உள்ளன. மேலும் இத்திட்டத்தால் காவிரி முதல் தெற்கு வெள்ளாறு வரை 119 கிலோ மீட்டர் தூரத்திற்கு கால்வாய் அமைத்து அதில் பெறப்படும் உபரி நீர் வினா டிக்கு 6,360 கன அடி வீதம்  கொண்டு வரப்பட்டு, புதுக் கோட்டை மாவட்டத்தில் உள்ள 760 கண்மாய்களுக்கு நீர் ஆதாரம் பெறுவதுடன்; 20,249.26 ஹெக்டேர் இதன் பயனாக விவசாய நிலங்கள் பாசன வசதி பெற உள்ளது.  இத்திட்டத்திப் பணியின் முன்னேற்றம் குறித்து பொ துப்பணித்துறை, வருவாய்த் துறை, நிலஅளவைத்துறை உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. மேலும் ஒவ்வொரு திங்கட் கிழமையும் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டப் பணிகளை விரைவு படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியரகத்தில் தொடர்பு டைய அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்த அறி வுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.