tamilnadu

img

விளையாட்டு முறையில் கற்றல் திறனை மேம்படுத்தும் ஆசிரியைக்குப் பாராட்டு

புதுக்கோட்டை,  மார்ச் 12- மாணவர்களைக் கவரும் வகையிலும், விளையாட்டு முறையிலும் கற்றல் திறனை  மேம்படுத்தும் ஆசிரியையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நேரில் அழைத்துப் பாராட்டினார். புதுக்கோட்டை மாவ ட்டம் விராலிமலை ஒன்றியம்  கவரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடை நிலை ஆசிரியராக பணி புரிந்து வருபவர் மீனா ராமநா தன். இவர் 4 ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு சின்னக்கு யில் என்னும் வாட்ஸ் அப் குழுவினை உருவாக்கி மாணவர்களின் குரல் உள்பட அனைத்து தனித் திறனை களையும் சிறப்பாக வளர்த்து வருகிறார்.  தமிழ் மட்டும் அல்லா மல் ஆங்கிலம், கணிதம்,  அறிவியல், சமூக அறிவி யல் என அத்துணை பாட ங்களையும் வெறும் பாடமாக மட்டும் போதிக்காமல் பாட்டு, நாடகம், ஓவியம், நடனமாக கற்று கொடுத்து வருகிறார். வரலாற்று பாடங்களை உணர்ச்சிமிக்க தோற்றங்களுடன் கற்பித்து வருகிறார். மாணவர்களால் பாடப்படும் மண்மணக்கும் கிராமியப்பாடல்களும், பாடம் சார்ந்த பாடல்களும் தமிழ், ஆங்கில செய்தி வாசி ப்பு என மாணவர்களால் வாசி க்கப்படும் செய்திகள் அனை த்தும், பதிவு செய்யப்பட்டு வாட்ஸ் அப் குழுவில் பதிவு  செய்து வருகிறார். இவ்வாறு மாணவர்க ளின் நலன் கருதி சிறப்பாக செயல்பட்டு வரும் ஆசிரியை  மீனா ராமநாதனை மாவட்ட முதன்மை கல்வி அலுவ லர் விஜயலட்சுமி நேரில் அழைத்து பாராட்டினார். இலுப்பூர் மாவட்ட கல்வி அதிகாரி ராஜேந்திரன், கவர ப்பட்டி அரசினர் மேல்நிலை ப்பள்ளி தலைமை ஆசிரியர்  சிவக்குமார், பள்ளித்துணை ஆய்வாளர் வேலுச்சாமி ஆகி யோர் உடன் இருந்தனர்.