tamilnadu

img

காவிரி-தெற்கு வெள்ளாறு-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு அடிக்கல்... புதுக்கோட்டையில் முதல்வர் துவக்கி வைத்தார்....

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை உள்ளிட்ட ஏழு மாவட்ட மக்களின் நூற்றாண்டு கனவுத் திட்டமான காவிரி-தெற்குவெள்ளாறு-வைகை-குண்டாறு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி பிப்ரவரி 21 ஞாயிற்று க்கிழமையன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். 

புதுக்கோட்டை மாவட்டம் குன்னத்தூரில் காவிரி-தெற்கு வெள்ளாறு -வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தின் முதல்கட்ட மாக ரூ.6,941 கோடி மதிப்பிலான பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். 
மேலும், கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணையில் இருந்து பிரியும் கட்டளைக் கால்வாயில் இருந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தெற்கு வெள்ளாறு வரை 118.45 கிலோமீட்டர் தொலைவுக்கு கால்வாய் வெட்டும் முதல்கட்டப்  பணிகளையும் முதல்வர் கொடியசைத்து உடனடியாக பொக்லைன் இயந்திரங்களின் கால்வாய் வெட்டும் பணிகளைத் தொடங்கி வைத்தார். 

பின்னர் நடைபெற்ற விழா விற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வரவேற்புரையாற்றினார். மேடையில் காவிரி-தெற்குவெள்ளாறு-வைகை-குண்டாறு திட்டம் மற்றும் ரூ.3384 கோடி மதிப்பில் காவிரி உபவடிநிலத்தில் தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் உள்கட்டுமானங்களில் விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்திற்கான கல்வெட்டையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், காவிரி-தெற்குவெள்ளாறு-வைகை-குண்டாறு திட்டம் நிறைவேற்றப் படுமான என பலரும் சந்தேகம்எழுப்பினர். ஆனால் இத்திட்டம்இன்று தொடங்கி வைக்கப்பட்டுள் ளது. என் வாழ்நாளில் மிகவும் முக்கியமான நாளாக இதைக் கருதுகிறேன். கரூரில் தொடங்கி புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்ட விவசாயிகளுக்கு இத்திட்டம் பயன்தரப்போகிறது. நாட்டு மக்களில் 65 சதவீதத்தினர் விவசாயிகளாக உள்ளனர். விவசாயத்திற்கு நீர் இன்றியமையாத் தேவையாக உள்ளது. தமிழ்நாடு நீர் பற்றாக்குறைஉள்ள மாநிலம். எனவே, ஒரு சொட்டுநீர்கூட வீணாகாத அளவுக்கு நீர்மேலாண்மைத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.

ரூ.1,417 கோடியில் குடிமராமத்துத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்பு களின் மூலம் சிறு குளங்களும் தூர்வாரப்பட்டிருக்கின்றன. தமிழக அரசின் நகர்ப்புறங்களில் உருவாகும் கழிவுநீரை நேரடியாக காவிரியில் கலப்பதைத் தடுத்து சுத்திகரித்து வெளிவிடும் திட்டம் ‘நடந்தாய் வாழி காவிரி திட்டம்”. இத்திட்டம் குடியரசுத் தலைவரின் உரையில் இடம்பெற்றிருக்கிறது. வேளாண் மக்களின் நலன் காக்கும் அரசாக, துயர் துடைக்கும் அரசாக எங்கள் அரசு செயல்படுகிறது என்று தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி நன்றி கூறினார். விழாவில் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஓ.எஸ்.மணியன், வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி, சட்டமன்ற உறுப்பினர்கள் இ.ஏ.ரெத்தினசபாபதி, பா.ஆறுமுகம், புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி நகராட்சிகளின் ஆணையர் (பொ) ஜீவா சுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக புதுக்கோட்டை மாவட்ட எல்லையான மதுரை சாலையில் இருந்து குன்னத்தூர் கிராமம் வரை பிரம்மாண்ட வரவேற்பு பதாகைகள் அமைக்கப்பட்டிருந்தன. வழி
யெங்கும் கரகாட்டம், குதிரையாட் டம் அலங்கார வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.        

படக்குறிப்பு : காவிரி - தெற்கு வெள்ளாறு - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

 (ந.நி.)

;