states

img

சர்வதேச நாடக விழாவை முதல்வர் துவக்கி வைத்தார்

திருச்சூர், பிப்.5- 13 ஆவது சர்வதேச நாடக விழாவை ஞாயிறன்று (பிப்.5)  திருச்சூரில் கேரள முதல்வர் பினராயி விஜயன் துவக்கி  வைத்தார். துவக்க நிகழ்ச்சி சங்கீத நாடக அகாடமி  வளாகத்தில் நடைபெற்றது. மட்டனூர் சங்கரன்குட்டி  மற்றும் 100 கலைஞர்கள் இணைந்து இசை மேளா நடத்தின.  பெவிலியன் தியேட்டரில் மாலை 5 மணிக்கு நடைபெறும்  நாடக விழாவை முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். அமைச்சர் சஜி செரியன் தலைமை வகித்தார்.  இதில் சிறப்பு விருந்தினராக பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ்  கலந்து கொண்டார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த தி தியேட்டர்  கம்பெனியின் ‘டேக்கிங் சைட்ஸ்’ என்னும் நாடகம் உட்பட  பல்வேறு நாடகங்களும், இசை நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றன.

;