பொன்னமராவதி, நவ.9- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில், காவல் துறை சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு டிஎஸ்பி தமிழ் மாறன் தலைமை வகித்து பேசினார். இதில் ஜமாத் நிர்வாகிகள் ஜரிப், அரபி, பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் பாஸ்கர் ஆகி யோர் பேசினார்கள். ஆய்வாளர்கள் கருணா கரன், பத்மா, மோகன், உதவி ஆய்வாளர்கள் ஆனந்தன், மேகநாதன், அன்பழகன் மற்றும் பாஜக நிர்வாகிகள் சேதுமலையாண்டி, வெள்ளைச்சாமி, சிவ குமாரிராசு, ஜமாத் நிர்வாகி கள் முகமது அப்துல்லா, அப்பாஸ், சாகுல் ஹமீது மற்றும் திருமண மண்ட பங்கள். லாட்சுகளின் உரி மையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், அயோத்தி வழக்கு தீர்ப்பை தொடர்ந்து அனைவரும் மதவேறு பாடின்றி ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். பட்டாசு வெடிக்கவோ, ஊர்வலம் நடத்தவோ, இனிப்புகள் வழங்கவோ அனுமதி யில்லை. கண்டன ஆர்ப்பாட் டம் நடத்த, ஊர்வலம் நடத்த அனுமதியில்லை. கட்சி சார்ந்த, மதம் சார்ந்த நிகழ்ச்சி களுக்கு அனுமதியில்லை. தனி நபர்களுக்கோ, தனி அமைப்பினர்களுக்கோ திருமண மண்டபம் கொடுக் கக் கூடாது. தனியார் விடுதி களில் தங்கியுள்ளோர் விபரம் தினசரி காவல் நிலையத் திற்கு தெரியப்படுத்த வேண்டும். சந்தேகப்படும் படி யாராவது வந்தால் அருகில் உள்ள காவல் நிலை யத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் உள்ளிட்டவை அறிவுறுத்தப்பட்டது.