புதுக்கோட்டை, ஆக.20- ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரடி பண உதவியாக மாதந்தோறும் ரூபாய் 6 ஆயிரம் வழங்கக் கோரி புதுக் கோட்டை மாவட்டம் அன்னவாச லில் புதன்கிழமை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. திருப் பூர் மக்கள் அமைப்பின் சார்பில் நடைபெற்ற இயக்கத்தை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சண் முகம் தொடங்கி வைத்தார். தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாவட்டச் செயலாளர் சி. அன்புமணவாளன் முன்னிலை வகித்தார். தொழிலாளர் முன் னேற்ற சங்கம் சார்பில் டி. பொய்யாமொழி உள்ளிட்ட ஏராள மானோர் பங்கேற்றனர். இதுகுறித்து திருப்பூர் மக்கள் அமைப்பின் மாவட்ட அமைப்பா ளர் சி.ராமதாஸ் கூறியது: கடந்த மார்ச் மாதத்திலிருந்து தொடரும் ஊரடங்கு காரணமாக புலம் பெயர் தொழிலாளர்கள், அமை ப்பு சாராத் தொழிலாளர்கள், தெரு வோர வியாபாரிகள், சுய தொழில் செய்பவர்கள் என அனைத்துத் தரப்பினரும் வேலையிழந்து, வருவாயின்றித் தவித்து வருகின் றனர். இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் நடத்தியக் கணக்கெடுப்பில், ஏப்ரல் மாதத் தில் 12.2 கோடிப்பேர் வேலை யிழந்துள்ளதாகத் தெரிய வந் துள்ளது.
தொடர்ந்து நான்கு மாதங்க ளுக்கு மேல் வருவாயின்றிக் குடும்பங்கள், தங்களது அடிப் படைத் தேவைகளான உணவுப் பொருட்கள், மருத்துவம், வீட்டு வாடகை, போன்ற செலவினங்க ளைச் சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இச்சூழலைச் சமாளிக்க அதிக வட்டிக்குக் கடன் வாங்கி வருகிறார்கள். இதே நிலைத் தொடர்ந்தால் பட்டினிச் சாவுகள் அதிகரிக்கும். ஆட்கடத் தல், கொத்தடிமைத் தொழிலாளர் முறை, குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலாளர் முறை போன்றவை அதிகரித்து, பெண் கள் மற்றும் குழந்தைகள் பெரு மளவில் பாதிப்புக்குள்ளாவர். கனடா நாட்டில் மாதம் 1,400 அமெரிக்க டாலர் வீதம் நான்கு மாதங்களுக்கும், ஹாங்காங்கில் 1280 டாலர்களும், ஜப்பானில் 931 டாலர்களும், தென்கொரியா வில் 820 டாலர்களும், சிங்கப்பூரில் 422 டாலர்களும், அமெரிக்கா வில் 1200 டாலர்களும், நேரடியாக வேலை வாய்ப்பை இழந்தவர் களுக்கு வழங்கப்படுகிறது. இதேபோல் இந்தியாவிலும், வருவாயிழந்தக் குடும்பங்க ளுக்கு ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ரூ.6000 வீதம் குறைந்தது நான்கு மாதங்க ளுக்கு வழங்க வேண்டும். மத்திய அரசு உடனடியாக இந்த உதவி யை, மாநில அரசுகள் மூலமாக செயல்படுத்த வேண்டும். தமிழ கத்தில் சுமார் 1 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்க திட்டமி டப்பட்டுள்ளது. பெறப்படும் கை யெழுத்துக்கள் அனைத்தும் மத் திய அரசுக்கு ஆகஸ்ட் மாதம் கடைசி வாரம் அனுப்பப்படும் எனத் தெரிவித்துள்ளார்.