tamilnadu

img

காவிரி, வைகை, குண்டாறு திட்டத்திற்கு தானாக நிலம் வழங்கிய விவசாயிகள்... அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்...

புதுக்கோட்டை:
காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்திற்காக 50 சதவிகிதத்திற்கும் அதிகமான விவசாயிகள் தானாக முன்வந்து நிலம் வழங்கியுள்ளதாக மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றகாவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டப் பணிகள் குறித்த ஆய்விற்கு பிறகு செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:புதுக்கோட்டை மாவட்ட மக்களின் நூற்றாண்டு கனவுத்திட்டமான காவிரி,வைகை, குண்டாறு இணைப்புத் திட்டம்ரூ.7,677 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட உள்ளது. முதற்கட்டமாக திட்டத் திற்கு நிலம் கையகப்படுத்துவதற்காக ரூ.700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கென சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலகம் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. 

இத்திட்டத்திற்கு தனிநபர் பேச்சுவார்த்தை மூலம் நிலம் வழங்குவதற்கு50 சதவிகிதத்திற்கும் அதிகமான விவசாயிகள் ஒப்புதல் கடிதம் வழங்கியுள்ளனர். நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப் படும். கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்த்து ரூ.333 கோடி மதிப்பீட்டில்ஒப்பந்தப்பணிகள் டிசம்பரில் நிறைவுபெற்று ஜனவரி மாதத்தில் முதலமைச்சரால் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படும்.இவ்வாறு அவர் கூறினார். ஆய்வுக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். வீட்டுவசதி வாரியத்தலைவர் பி.கே.வைரமுத்து முன்னிலைவகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயலெட்சுமி, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ரம்யாதேவி, பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் (நீர்வள ஆதாரம்) திருவேட்டைசெல்லம் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.