புதுக்கோட்டை, ஜூலை 19- கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வரும் சூழலில் பரிசோதனை களை கிராம அளவில் விரி வுபடுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு மற்றும் ஒன்றியச் செயலாளர்கள் கூட்டம் வீடியோ கான்ப ரன்ஸ் மூலமாக ஞாயிற்றுக்கி ழமை நடைபெற்றது. மாவ ட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர் தலைமை வகி த்தார். மாநிலக்குழு முடிவு களை விளக்கி மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் பேசினார். கூட்டத்தில் நடைபெற்ற தீர்மானங்களை விளக்கி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது: உலகையே அச்சுறுத்தும் கொரோனா நோய்த்தொற்று இந்தியாவிலும், தமிழ கத்திலும் தீவிரமாக அதிக ரித்து வருகிறது. தொடக்க த்தில் நோய்த்தொற்று இல்லாத மாவட்டமாக புது க்கோட்டை இருந்த நிலை யில் சமீப காலமாக மிக வேக மாக பரவி வருகிறது.
புது க்கோட்டை, அறந்தாங்கி உள்ளிட்ட நகரப் பகுதி கள் மட்டுமல்லாது கிராமப்பு றங்களிலும் நோய்த்தொற்று வேகமாகப் பரவி மக்களை கலக்கத்தில் ஆழ்த்தி வரு கிறது. இதனால், மக்கள் தினந்தோறும் மரண பயத்தை அனுபவித்து வரு கின்றனர். தமிழக அரசும் சுகாதா ரத்துறையும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நோ ய்த்தொற்றை கட்டுப்படுத்த தீவிரமாக நடவடிக்கை மேற்ககொள்ள வேண்டும். நகரங்களில் மட்டுமல்லாது கிராமங்களில் அனைத்து குக்கிராமங்களிலும் பரி சோதனைகளை விரிவுப டுத்த வேண்டும். அனைத்து அரசு ஆரம்ப சுகாதார மைய ங்களிலும் கொரோனா பரி சோதனை மையகங்களை ஏற்படுத்த வேண்டும். மருத்துவர்கள் மற்றும் செவி லியர்களுக்கு போதுமான பரி சோதனைக் கருவிகளை யும் பாதுகாப்பு உபகர ணங்களையும் வழங்க வேண்டும்.
ரேசன் கடைகள் மூலமாக இலவசமாக அனைத்து குடும்பங்களுக்கும் முக க்கவசம் மற்றும் கபசுரக் குடி நீர் பாக்கெட் வழங்க வேண்டும். கொரோனா நோ யைக் கட்டுப்படுத்துவ தற்கான விழிப்புணர்வுவை அனைத்து வீடுகளிலும் மேற்கொள்ள வேண்டும். புதுக்கோட்டை ராணி யார் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோ னா வார்டில் உள்ள கழி ப்பறை உள்ளிட்ட வசதிகள் மிக மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், போதுமான அளவு உணவு வழங்கப்படவில்லை என வும், கொடுக்கப்படும் உண வும் தரமானதாக இல்லை யெனவும் கூறப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் உடன டியாக தலையிட்டு நடவ டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.