புதுக்கோட்டை, ஜூலை 4- மத்திய, மாநில அரசுகளின் தொழி லாளர் விரோத போக்கை கண்டி த்தும், ஊரடங்கு காலத்தில் பொது த்துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் கொள்கையை கண்டி த்தும் அனைத்துத் தொழிற்ச ங்கத்தினர் வெள்ளிக்கிழமை நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை அரசுப் போக்கு வரத்துப் பணிமனை முன்பாக நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச மாவட்ட நிர்வாகிகள் ரெத்தினம், வேலுச்சாமி, சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் ஸ்ரீதர், முகமதலிஜின்னா ஆகியோர் தலைமை வகித்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் போக்குவரத்துப் பணி மனைகள், ஆட்டோ நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தரங்கம்பாடி
மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட பொருளாளர் ஆர்.ரவீந்திரன் தலைமை வகித்தார்.
திருவாரூர்
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் சிஐடியு மாவட்ட செயலாளர் டி.முருகையன் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் எம். கே.என்.அனிபா, புதிய ரயில் நிலைய சந்திப்பில் எஸ். வெங்கடேசன், கூட்டுறவு அங்காடி முன்பு சின்னத்தம்பி, வடக்கு வீதி யில் சிஐடியு மாவட்டத் தலைவர் இரா. மாலதி, தலைமை தபால் நிலையம் முன்பாக ஏஐடியுசி நிர்வாகி வி.தர்ம தாஸ், நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் முன்பு கஜேந்திரன், எஸ்.ஆர்.எம் அலுவலகம் முன்பாக ஆர்.மோகன், அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக எம்.மோகன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகில் சிஐடியு மாவட்டப் பொருளாளர் எம்.பி.கே.பாண்டியன் தலைமை வகித்தார்.
மன்னார்குடி
மன்னார்குடியில் 13 மையங்க ளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நக ராட்சி அலுவலகம் முன்பாக ஏஐடியுசி தலைவர் வி.கலைச்செல்வன், சிஐடியு துணைத் தலைவர் ஜி.ரகு பதி, எல்பிஎஃப் தலைவர் கே.எஸ். மகாதேவன் ஆகியோர் தலைமை யில் நடைபெற்றது. நீடாமங்கலத்தில் அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக வட்டத் தலைவர் சின்னையன் தலைமை வகித்தார்.