tamilnadu

நெகிழிக்கு மாற்றுவழி கோரி ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, செப்.19-  புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்க லத்தில் நெகிழி பொருட்களுக்கு மாற்று ஏற்பாடு கள் செய்ய கோரி உணவக உரிமையாளர்கள் கடைகளை அடைத்து வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுற்றுச்சூழல் மற்றும் உடல் நலன் காக்க நெகிழி பொருட் களை அரசு தடை வித்துள்ளது. தமிழக அரசின் இந்த திட்டத்தை பொதுமக்களும் வரவேற்று நெகிழி பை களை பயன்படுத்து வதை குறைத்து வருகின்றனர்.  இந்நிலையில் கீரமங்கலம் பேரூராட்சி நிர்வாகம் தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு பணி யில் தீவிரம் காட்டி வரும் நிலையில் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் அர சின் நெகிழி ஒழிப்பு திட்டத்தை வரவேற்கி றோம். ஆனால் அதற்கு மாற்று பொருளை அரசு அறிமுகப்படுத்தினால் எங்கள் வியாபாரம் பாதிக்காது என்று கோரிக்கை வைத்து ஒரு நாள் உணவகங்களை அடைத்தனர்.  மேலும்பேருந்து நிலையம் அருகே உணவக உரிமையாளர்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.