tamilnadu

அவதூறு செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழ் எரிப்பு

அறந்தாங்கி, ஏப்.2- கோவை மாநகரில் ஆறு வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாகி இறந்துபோன சம்பவத்தில் ஈடுபட்ட பாரத் சேனா அமைப்பைச் சேர்ந்த சந்தோஷ்குமார் மார்க்சிஸ்ட் கட்சியில் பொறுப்பில் இருந்தார் என்று பொய்ச் செய்தி வெளியிட்டது தினமலர் நாளிதழ். இந்த நாளிதழை எரிக்கும் போராட்டம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அறந்தாங்கி தாலுகா குழு சார்பாக காந்தி பூங்காசாலை சிபிஎம் கட்சி அலுவலகம் அருகே மாவட்டத் தலைவர் கர்ணா தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் சங்க ஒன்றியத் தலைவர் கோபால், தமுஎகச கவிபாலா, சிபிஎம் ஆவுடையார் கோவில் ஒன்றிய செயலாளர் நெருப்பு முருகேஷ் உள்படத் திரளானோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தவறான செய்தி வெளியிட்ட தினமலர் மறுப்புச்செய்தி வெளியிட வேண்டும்; பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆர்ப் பாட்டத்தில் கோஷம் எழுப்பினர்.

;