tamilnadu

புதுகையில் குடிமராமத்துப் பணி

புதுக்கோட்டை, ஆக.10-  குடிமராமத்து திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் கண்மாய், அணைக்கட்டு, வரத்து வாய்க்கால் தூர் வாருதல் உள்ளிட்ட பணிகள் பாசனதாரர்கள் சங்கம் மூலமாக மேற்கொள்ளப்படுகிறது. நடப்பு 2019-20 ஆம் ஆண்டில் 66 பணி ரூ.20.27 கோடி மதிப்பில் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு இதில் 63 பணி நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 231 பணி ரூ.31.68 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.