tamilnadu

img

புதுக்கோட்டையில் சிறுவர் பூங்கா அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திறந்தார்

புதுக்கோட்டை, அக்.25- புதுக்கோட்டை நகராட்சி, சத்தியமூர்த்தி சாலையில் நகராட்சியின் சார்பில் அமைக்கப்பட்ட புதிய சிறுவர் பூங்கா வினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜய பாஸ்கர் வியாழக்கிழமையன்று திறந்து வைத்தார். அவர்பேசும்போது, புதுக்கோட்டை நகராட்சியில் அம்ரூட் திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய சிறுவர் பூங்கா திறந்து வைக்கப்பட்டுள்ளது. இச்சிறுவர் பூங்காவில் சிறுவர்கள் விளையாடுவதற்கு ஏற்ற வகையில் பூங்காவில் இரப்பரால் ஆன தரைவிரிப்பான்கள், நீருற்றுகள், வண்ண விளக்குகள், மரஇருக்கைகள், வண்ண ஓவியங்கள், 3டி அமைப்புகள், சருக்கு மரங்கள் உள்ளிட்ட ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. கூலாங் கற்களால் 8 வடிவில் பெரியவர்களுக்கான நடைபயிற்சி  அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.  திறப்பு விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தலைமை வகித்தார். எம்எல்ஏ பா.ஆறுமுகம், நகராட்சி ஆணையர் ஜீவாசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.