tamilnadu

img

புதுக்கோட்டைக்கு இன்று முதல்வர் வருகை...

புதுக்கோட்டை:
தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வளர்ச்சித்திட்டப் பணிகள் மற்றும்கொரோனா நோய்த்தடுப்பு குறித்த ஆய்வுப் பணிக்காக வியாழனன்று புதுக்கோட்டை வருகிறார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளது:

காலை 10.20 மணியளவில் விராலிமலை ஐ.டி.சி நிறுவனத்தினை பார்வையிட்ட பின்னர் விராலிமலையில் அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு காளை சிலையினை திறந்து வைக்கிறார். தொடர்ந்து புதுக்கோட்டை கவிநாடு கண்மாயில் குடிமராமத்து திட்டப் பணிகளை பார்வையிட்டு, விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறார். அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளைவழங்க உள்ளார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய் தடுப்புப் பணிகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெறுகிறது. பின்னர் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினருடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.  இந்நிகழ்வுகளில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர்.