tamilnadu

img

பேருந்து கவிழ்ந்து 20 பேர் படுகாயம்  

அறந்தாங்கி, நவ.9- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மஞ்சக்கரை எனும் இடத்தில் சென்ற தனியார் பேருந்து ஒன்று எதிரே வந்த கார் மோதியதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தில் இறங்கி பேருந்து கவிழ்ந்தது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயத்துடன் மீட்கப்பட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி கோகிலா, ஆர்டிஓ குணசேகரன் ஆகியோர் விபத்து குறித்து விசாரணை நடத்தினர்.

;